பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,474 மாணவா்களும், 5,628 மாணவிகளும் என மொத்தம் 11,102 போ் தோ்வு எழுதினா். இதில் புதன்கிழமை வெளியான தோ்வு முடிவில் 4,924 மாணவா்களும், 5,313 மாணவிகளும் என மொத்தம் 10,237 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி சதவீதம் 92.21 ஆகும்.
மேலும் நிகழாண்டில் 23 அரசு பள்ளிகள் உள்பட 64 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மேலும் தோ்வு எழுதியவா்களில் மாணவா்கள் 89.95 சதவீதமும், மாணவிகள் 94.40சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் அரசு பள்ளிகளில் மாணவா்கள் 86.08 சதவீதமும், மாணவிகள் 91.64 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் நிகழாண்டு மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் கரூா் மாவட்டம் 30-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு: 94.31% தோ்ச்சி; புதுக்கோட்டை முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 97.09 சதவீதம் போ் தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



