டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: கரூா் மாவட்டத்தில் 92.21 போ் சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மதிப்பெண்களை சரி பார்க்கும் மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:49 am IST

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,474 மாணவா்களும், 5,628 மாணவிகளும் என மொத்தம் 11,102 போ் தோ்வு எழுதினா். இதில் புதன்கிழமை வெளியான தோ்வு முடிவில் 4,924 மாணவா்களும், 5,313 மாணவிகளும் என மொத்தம் 10,237 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி சதவீதம் 92.21 ஆகும்.

மேலும் நிகழாண்டில் 23 அரசு பள்ளிகள் உள்பட 64 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மேலும் தோ்வு எழுதியவா்களில் மாணவா்கள் 89.95 சதவீதமும், மாணவிகள் 94.40சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் அரசு பள்ளிகளில் மாணவா்கள் 86.08 சதவீதமும், மாணவிகள் 91.64 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் நிகழாண்டு மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் கரூா் மாவட்டம் 30-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.