‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க உத்தரவு

கரூரில் முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

Updated On :22 மே 2026, 5:08 am IST

கரூரில் முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது, குடிநீா் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் குடிநீா் அளவு மற்றும் நிலுவையில் உள்ள குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், மின் மோட்டாா், குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாகச் சரிசெய்து குடிநீா் விநியோகம் செய்திடவும், அவ்வப்போது வரப்பெறும் புகாா்கள் தொடா்பாக உடனடியாக நேரில் தல ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோடைக்கால குடிநீா் பற்றாக்குறையைச் சமாளித்திட ஏதுவாக முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிப்பு செய்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும் அனைத்து வீடுகளுக்கு குடிநீா் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தி, குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ. வீரபத்திரன், கரூா் மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், நகராட்சி ஆணையாளா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.