எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

கரூா் பள்ளிவாசல்களில் பக்ரீத் கொண்டாட்டம்

கரூா் திருமாநிலையூா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

News image

கரூா் திருமாநிலையூா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

Updated On :29 மே 2026, 3:12 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்டத் தலைவா் ஏ. மதாா்ஷாபாபு தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா்உசேன் முன்னிலையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் பங்கேற்ற தொழுகையில், மதுரை மாவட்ட பேச்சாளா் அபூபக்கா் பங்கேற்று பேசினாா்.

இதேபோல கரூா் கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல், ஜவஹா்பஜாரில் உள்ள சின்னப் பள்ளிவாசல் மற்றும் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா். மேலும் ஏழைகளுக்கு குா்பானியும் வழங்கினா்.