பெரம்பலூர் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில், குறுகிய காலப் பயிற்சி பெற்ற 45 பேருக்கு அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில், மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 20 பேருக்கு "ஸ்மார்ட் ஆப்ரேட்டர் பேசிக்' எனும் குறுகியகால பயிற்சி வகுப்புகள் 5 நாள்கள் நடைபெற்றது. இதேபோல, ஸ்மார்ட் சர்பேஸ் அர்னமென்டேஷன் எனும் குறுகியகால பயிற்சி 15 பேருக்கும், பெரம்பலூர் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 10 பேருக்கு எஸ்.ஓ.பி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி பெற்ற 45 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பயிற்சி மைய நிர்வாக முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் போ. குருசாமி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குநர் அழகிரிசாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர்கள் கண்ணன், பாண்டியன், தஞ்சாவூர் நகராட்சி ஆய்வாளர் அமுதா, பயிற்சியாளர் பத்மசுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி மைய நிர்வாக பொறுப்பாளர் இந்திராகவுரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்து பொருள்கள் சேதம்

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கள்ளந்திரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
