இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குறுகியகால பயிற்சி பெற்ற 45 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

பெரம்பலூர் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில், குறுகிய காலப் பயிற்சி பெற்ற 45 பேருக்கு அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Updated On :12 மே 2013, 6:15 am IST

பெரம்பலூர் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில், குறுகிய காலப் பயிற்சி பெற்ற 45 பேருக்கு அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில், மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 20 பேருக்கு "ஸ்மார்ட் ஆப்ரேட்டர் பேசிக்' எனும் குறுகியகால பயிற்சி வகுப்புகள் 5 நாள்கள் நடைபெற்றது. இதேபோல, ஸ்மார்ட் சர்பேஸ் அர்னமென்டேஷன் எனும் குறுகியகால பயிற்சி 15 பேருக்கும், பெரம்பலூர் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 10 பேருக்கு எஸ்.ஓ.பி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி பெற்ற 45 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பயிற்சி மைய நிர்வாக முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் போ. குருசாமி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குநர் அழகிரிசாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர்கள் கண்ணன், பாண்டியன், தஞ்சாவூர் நகராட்சி ஆய்வாளர் அமுதா, பயிற்சியாளர் பத்மசுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி மைய நிர்வாக பொறுப்பாளர் இந்திராகவுரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.