
6,668 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள வளாகத்தில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாணவரணி செயலரும், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள வளாகத்தில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாணவரணி செயலரும், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, நகர செயலர் ஆர். ராஜபூபதி, நகராட்சி தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தையல் இயந்திரம், குத்து விளக்கு, குடம், வேட்டி- சேலை, வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 6,668 பேருக்கு வழங்கினார் மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன்.
விழாவில் மாவட்ட அணி செயலார்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், குரும்பலூர் பேரூர் செயலர் செல்வராஜ், சங்கு சரவணன், டாக்டர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





