இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிக்கு 30 வீரர்கள் தேர்வு

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிக்கு 30 வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர். 

Updated On :23 ஜூலை 2018, 8:53 am IST

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிக்கு 30 வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர். 
தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தும் மாநில அளவில், மாவட்டங்களுக்கு இடையிலான தொடர் கிரிக்கெட் போட்டியானது, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆக. 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  
இதையொட்டி, பெரம்பலூர் மாவட்ட அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாம், பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இத் தேர்வு முகாமில், 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர்.  தேர்வு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பெளலிங், பேட்டிங், பீல்டிங் ஆகியவை நடத்தப்பட்டு, சிறந்த முறையில் விளையாடிய 30 வீரர்கள் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.