குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பருத்தி கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் மறியல்

வேப்பந்தட்டை அருகே பருத்தி கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:20 am IST

வேப்பந்தட்டை அருகே பருத்தி கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும், பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும் இணைந்து செவ்வாய்க்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடத்தி வருகின்றன. 
அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பசும்பலூர், கவர்பனை, அனுக்கூர், பிம்பலூர், வேப்பந்தட்டை உள்பட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 270 விவசாயிகள் 30 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏல முறை விற்பனைக்கு கொண்டுவந்தனர். 
இந்நிலையில், கடந்த வாரத்தை விட பருத்தி விலை குறைவாக ஏலம் கேட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குவிண்டாலுக்கு ரூ. 300 வரை விலை குறைந்ததாக பருத்தி விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் அலுவலர்களிடம் விவசாயிகள் முறையிட்டனராம். ஆனால், பருத்திக்கான கொள்முதல் விலையை உயர்த்தவில்லையாம். இதனால் 
அதிருப்தியடைந்த பருத்தி விவசாயிகள் விலை குறைவைக் கண்டித்து, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களிடம் அரும்பாவூர் போலீஸாரும், அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், பருத்தி ஏலம் விடும் நடைமுறை மிகவும் தாமதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.