குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெரம்பலூரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி: இளைஞர் கைது

பெரம்பலூர் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:33 am IST

பெரம்பலூர் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். 
பெரம்பலூர் நகரின் பிரதான சாலையில் உள்ள வெங்கடேசபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர், தனது சட்டையை களைந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மூடிவிட்டு, கம்பியைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தாராம். 
இதைப் பார்த்த  அப்பகுதியைச் சேர்ந்தோர் சிலர் புறநகர் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமியிடம் தகவல் தெரிவிக்க,  அவர் ஊர்க்காவல் படை வீரர் கண்ணனுடன் (35) அங்கு சென்றார். அப்போது கண்ணனைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற அந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.  
விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி அருகேயுள்ள இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் (22) என்பதும், இவர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் பாதுகாப்பு பணி கண்காணிப்பாளர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான ஊர்க்காவல் படை வீரர் கண்ணன்,  தனுஷ் ஆகிய இருவரும், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கண்ணன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.