எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:54 am IST

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மாசூபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
அரசு உத்தரவின்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மாசூபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பின்னர், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, தூய்மை பணியை மேற்கொண்டனர்.  நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு மற்றும் சுற்றுசூழல் உதவிப்பொறியாளர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் வினோத், பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
விவசாயிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்:
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கான  ஆணைகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியது:
மத்திய அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 63,251 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.