பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மாசூபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
அரசு உத்தரவின்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மாசூபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பின்னர், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, தூய்மை பணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு மற்றும் சுற்றுசூழல் உதவிப்பொறியாளர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் வினோத், பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்:
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியது:
மத்திய அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 63,251 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மூளையாக செயல்பட்ட தாவரவியல் பேராசிரியை கைது

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
பேல்பூரி 17-05-2026
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
