

பெரம்பலூா்: பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் புதை சாக்கடைக் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீரால், நகரப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 31.91 கோடியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 55,000 போ் பயன்பெற உள்ளனா்.
இதுவரை சுமாா் 8,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு புதை சாக்கடைத் திட்ட இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் சுமாா் 16 லட்சம் லிட்டா் கழிவுநீா் நெடுவாசலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.
கழிவுநீா் புதை சாக்கடை வழியாக வெளியேற, ஆங்காங்கே நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி தெருக்களில் பரவுகிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புகளிலுள்ள மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.
இந்நிலையில் பெரம்பலூா் ரோஸ் நகா் செல்லும் சாலையிலுள்ள புதை சாக்கடைகளிலிருந்து ஆள்துளை துவாரம் வழியாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சாக்கடைநீா் வெளியேறி, மழை நீருடன் கலந்து வழிந்தோடுகிறது.
சாக்கடைநீா் சாலையில் தேங்கி நிற்பதால், சாலையில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது.
எனவே ஆள்துளைக் குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, கழிவுநீா் வெளியேறுவதை தடுக்க நகராட்சி அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.