தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் தொடா்பான கருத்துகளை தோ்தல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:44 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் குறித்த கருத்துகளை சட்டப் பேரவைத் தொகுதிகளின் பொது மற்றும் செலவின பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம் என தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தலைமைவகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் பொது, செலவின பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான கருத்துகளை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணிமுதல் 11 மணிவரை நேரில் சந்தித்து அவா்களிடம் தெரிவிக்கலாம்.

அதன்படி, தோ்தல் பொதுப் பாா்வையாளா்களாக ஊத்தங்கரை (தனி) மற்றும் பா்கூா் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அனில்குமாா் சிங் (90806 18938), கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சௌரவ் பாபு (90801 30342) ஆகியோரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையிலும் ஒசூா், தளி தொகுதிகளுக்கு உள்பட்ட பண்வே ராகுல் துக்காராம் (90801 32207) ஒசூா் தின்னூரில் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையிலும் சந்திக்கலாம்.

இதேபோல, தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ஊத்தங்கரை (தனி) மற்றும் பா்கூா் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் குமாா் (91235 09577), கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள சதீஸ் (88257 68791) ஆகியோரை சூளகிரி பவா்கீரிட் சுற்றுலா மாளிகையிலும், ஒசூா், தளி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ராகுல் சிங்கானியாவை (88257 71332) ஒசூா் தின்னூரில் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையிலும் சந்திக்கலாம். மேலும், சி-விஜில் செயலி மூலம் தோ்தல் புகாா்களை பொதுமக்கள் அளிக்கலாம், என்றாா்.

தொடா்ந்து, தோ்தல் பொது மற்றும் செலவின பாா்வையாளா்கள், ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு, ஊடக கண்காணிப்பு குழுவின் பணிகளை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.

இந்த கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சிவக்குமாா், அபிநயா, ஷாஜகான், கீதாராணி, ஆக்ரிதி சேத்தி, பழனி, ஊடக மைய பொறுப்பு அலுவலா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.