நிதித் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பெரம்பலூரில் பாஜக மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் வே. சாந்தாவிடம் மனு அளித்தனா்.


பெரம்பலூரில் பாஜக மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் வே. சாந்தாவிடம் மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவா்கள் பெயா் பதிவு செய்யப்பட்டு, அவா்களது வங்கிக் கணக்கில் பணம் வரவாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவோா் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, பரிசீலனை செய்து மோசடிகள் நடைபெற்று உள்ளதா என ஆராயவேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் மாநில அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...