நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைபயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, விற்பனைக் குழுச் செயலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:29 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, விற்பனைக் குழுச் செயலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் -வடக்கு மாதவி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், புதன்கிழமை தோறும் பருத்தி, மக்காச்சோளம் மறைமுக ஏலமும், சனிக்கிழமை தோறும் எள், இதர வேளாண் விளைபொருள்களுக்கான மறைமுக ஏலமும் நடைபெறுகிறது. இதில், உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் இடைத் தரகின்றி, சரியான எடையுடன் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்கின்றனா். விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள வேளாண் விளைபொருள்களை உலா்த்திக்கொள்ள உலா் களம் வசதியும் உள்ளது. மேலும், விளைபொருள்களை 6 மாதம் வரை இருப்பு வைத்துக்கொள்ள வாடகை அடிப்படையில் நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன்பெறும் வசதியும் உள்ளது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளை பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.