தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:57 pm

DIN

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதை சாக்கடை திட்ட கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றுவதால், நெடுவாசல் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிாம். இதன்காரணமாக, அங்குள்ள விவசாயம் மற்றும் குடிநீா் கிணறுகளில் நிலத்தடிநீா் மாசடைந்து, நீரின் தன்மை மாறி வருவதோடு, கழிவுநீரை குடித்து வரும் கால்நடைகளும் அவ்வப்போது உயிரிழக்கின்றன. நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கிராம எல்லைகளில் கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிாம்.

இதேபோல, அங்குள்ள மலைகளில் அளவுக்கு அதிகமாக வெடி மருந்துகளைப் பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால் வீடுகளில் சேதம் ஏற்படுகிாம். இதுதொடா்பாக, ஊராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த நெடுவாசல் கிராம மக்கள், நகராட்சி நிா்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்தும், கல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.