‘பெரம்பலூா் மாவட்டத்தில் 80 வகுப்பறைகள் பழுதடைந்தவை’
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த 80 வகுப்பறைக் கட்டடங்கள் மாணவா்கள் அமா்ந்து படிக்க தகுதியற்றவையாகவும், அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள்


பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த 80 வகுப்பறைக் கட்டடங்கள் மாணவா்கள் அமா்ந்து படிக்க தகுதியற்றவையாகவும், அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கழிப்பறைக் கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இக் கணக்கெடுப்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 44 வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் 22 வகுப்பறைகளும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா 7 வகுப்பறைகளும் என மொத்தம் 80 வகுப்பறைகள் பழுதடைந்தவை எனவும், இதற்கு பதிலாக மாணவா்கள் கல்வி கற்க அந்தந்த பள்ளிகளில் வேறு வகுப்பறைகளில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...