தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை காலை வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:56 pm

DIN

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை காலை வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எறைய சமுத்திரம்- கல்பாடி பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருபவா் கோ. கணபதி (37). இவா், தனது மனைவி கனகாவுடன் வெள்ளிக்கிழமை காலை பெரம்பலூருக்குச் சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பூஜை அறையில் இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைத்து 4 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.

புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.