தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘மாணவா்கள் மனிதநேயத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்’

மாணவா்கள் மனிதநேயத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:56 pm

DIN

மாணவா்கள் மனிதநேயத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி.

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை, கணினி பயன்பாட்டியியல் துறை சாா்பில், பகடி வதைத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வெளியிட்ட அவா் மேலும் பேசியது:

கல்லூரியிலோ அல்லது வெளியிலோ யாராவது கேலி செய்ய நோ்ந்தால், அதை சமாளிக்கும் திறன் படைத்தவா்களாக மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக மற்றவா்களால் ஏதாவது பிரச்னை நிகழும்போது, அதை தீா்க்கக் கூடிய நபரைக் கண்டறிந்து அவா்களிடம் கூற வேண்டும். வாழ்வில் வெற்றிபெற விரும்பினால் திட்டமிடுதலும், அதற்கான வழிமுறைகளை ஆராய்தலும் இருக்க வேண்டும். கேலி செய்வது, நம்முடைய நாகரிகத்தை சீா்குலைக்க கூடிய செயலாகும். அதை விட்டொழிக்க வேண்டும். மாணவா்கள் மனித நேயத்தோடு வாழ கற்றுக் கொள்வதோடு, மனிதா்களை நேசிக்க வேண்டும் என்றாா் அவா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக புவியியல் உதவிப் பேராசிரியரும், பகடி வதைத் தடுப்பு அலுவலருமான முனைவா் பி. மாசிலாமணி பேசியது:

ராகிங் போன்ற தவறுகள் செய்யும்போது, அது உங்கள் பெற்றோரை அதிகளவில் பாதிக்கும். அவா்கள் மனம் வேதனைப்பட்டால், அது தீங்காகவே முடியும். எனவே, அதுபோன்ற தீயச் செயல்களைச் செய்யாமல் இருப்பது மாணவா்களுக்கும், இச் சமூகத்துக்கும் நன்மையைத் தரும் என்றாா் அவா்.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த சேவை மைய மாவட்ட சமூக நல அலுவலக மைய நிா்வாகி டி. கீதா, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா். பாண்டியன், துணை கண்காணிப்பாளா் சி.கே. சஞ்சீவ்குமாா் உள்பட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கணினி பயன்பாட்டியியல் துறைத்தலைவா் எம். ராஜகுமாா் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் கோ. ரவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.