கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.


பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி பொன்னரும்பு (70). மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவா், அப் பகுதியில் உள்ள ராஜராஜன் என்பவரது கிணற்றில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புப் படை வீரா்கள், அவரது உடலை மீட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...