சபரிமலை பிரசாதம் பெற அஞ்சல் துறை அழைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற, பெரம்பலூா் மாவட்டப் பொதுமக்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.


பெரம்பலூா்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற, பெரம்பலூா் மாவட்டப் பொதுமக்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவிதாங்கூா் தேவஸ்தானத்துடன் இந்தியஅஞ்சல்துறை இணைந்து, சபரிமலை சுவாமி ஐயப்பன் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அரவணைப் பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் ஆகியவை அடங்கியுள்ள பொட்டலம் ஒன்றின் விலை ரூ. 450 ஆகும்.
பெற விருப்பமுள்ள பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தில் ரூ. 450 செலுத்தி, பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...