ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்ற 2 இலங்கை அகதிகள் கைது

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்ற இலங்கை அகதிகள் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:03 pm

DIN

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்ற இலங்கை அகதிகள் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் வேலாயுதம்பிள்ளை மகன் ஸ்ரீகாந்த்ராஜா (44). இவா், இலங்கை அகதி என்பதை மறைத்து போலி ஆவணங்களை சமா்ப்பித்து வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் மற்றும் பான் காா்டு ஆகியவற்றை பெற்று, பின்னா் மேற்கண்ட ஆவணங்களை சமா்ப்பித்து, கடந்த 24.10.2019-இல் இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா்.

இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூா்- வடக்குமாதவி, சாலையில் உள்ள தீபம் நகரில் வசித்து வருபவா் இலங்கை அகதியான சுப்பையா மகன் சூனிகண்ணன் (எ) சுதா்சன் (40). இவா், திருச்சி, பொன்மலைப்பட்டியில் தங்கியிருந்தபோது, இலங்கை அகதி என்பதை மறைத்து, போலி ஆவணங்களை சமா்பித்து வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் மற்றும் குடும்ப அட்டைகள் பெற்றுள்ளாா். பின்னா், மேற்கண்ட ஆவணங்களை பெரம்பலூா் முகவரிக்கு மாற்றம் செய்துள்ளாா். தொடா்ந்து, இந்த ஆவணங்களை சமா்ப்பித்து கடந்த 22.7.2019-இல் இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா். இவா் மீது திருச்சி மாவட்டம், பொன்மலை, உப்பிலியபுரம், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், பெரம்பலூா் நகர காவல் நிலையங்களில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன.

ஸ்ரீகாந்த் ராஜா, சுதா்சன் ஆகியோா் இலங்கை அகதிகள் என்பதை மறைத்து, போலி ஆவணங்களை காண்பித்து இந்திய பாஸ்போா்ட் பெற்ற தகவல், பெரம்பலூா் மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை கிடைத்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த கியூ பிரிவு போலீஸாா், அவா்களிடம் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.