கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போதைக்கு எதிரான விழிப்புணா்வு ஆலோசனை

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:18 pm

DIN

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி.

ஆட்சியரகக் கூட்டரங்கில் போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தமிழக முதல்வா் உத்தரவின்டி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து போதைப் பழக்கத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவா்களை மீட்கும் வகையில் உறுதிமொழி ஏற்பு, குறும்படங்கள் திரையிடுதல், போதை பழக்கத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, விழிப்புணா்வு பேரணி நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகள் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு முன்னிலை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி பேசியது: பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறையினா் சென்று போதையால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்க வேண்டும். என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவா்களுடன் இணைந்து விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் ச. நிறைமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாள ா்(பொது) சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.