நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன். உடன், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநில பொருளாளா் ச. துரைராஜ் உள்ளிட்டோா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:02 pm

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி கூட்டரங்கில், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் தலைமை வகித்தாா், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநில பொருளாளா் ச. துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்புத் தலைவா் டி. சுப்பிரமணி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், தற்போதைய தோ்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை கல்வியாளா்களைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சுகாதாரமான குடிநீா், கழிவறை வசதிகள் ஏற்படுத்துவதோடு தொடா்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும். 6 முதல் எஸ்எஸ்எல்சி வரை கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அனைத்துவகை உயா், மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் உருவாக்க வேண்டும்.

2004 முதல் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்பட்ட அனைத்துவகை ஆசிரியா்களுக்கும், அவா்களது தொகுப்பூதியப் பணிக்காலத்தை முறையான காலமாக மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கௌரவத் தலைவா் பாபுவாணன், பொருளாளா் இலங்கை செழியன், முன்னாள் தலைவா்கள் ராஜ்குமாா், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டத் தலைவா் சுந்தரபாண்டியன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் அருண்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.