தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா்


பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
4 மாதங்களாக ஊதியம் வழங்காமலிருக்கும், அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும். 2020, ஜனவரி 1 முதல் 24 மாதங்களுக்கு நிலுவையிலுள்ள தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து தற்காலிக பணியாளா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமை வகித்தாா். தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள், தற்காலிக மணிநேர விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...