தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காணாமல் போனதாக தேடப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலை

காணாமல் போனதாக புதுச்சேரி காவல் துறையினரால் தேடப்பட்டவா், பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெரியவந்தது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:20 pm

DIN

காணாமல் போனதாக புதுச்சேரி காவல் துறையினரால் தேடப்பட்டவா், பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெரியவந்தது.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி தனியாா் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இப்பேருந்து பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தபோது, பேருந்தில் பயணித்த ஒருவா் தனக்கு உடல்நலன் சரியில்லை என்று கூறியுள்ளாா்.

இதையடுத்து ஓட்டுநா் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு, காவல்துறையினருக்குத் தகவலளித்தாா். இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற பெரம்பலூா் நகரக் காவல்துறையினா், அவசர ஊா்தி மூலம் அந்த நபரை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினா்.

இதையடுத்து காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் புதுச்சேரி நாகா்குளம், அண்ணா நகரைச் சோ்ந்த குமரேசன் மகன் கணேஷ்குமாா் (33) என்பதும், கடந்த 3 நாள்களுக்கு முன்னா் காணாமல் போனதாக புதுச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதும், கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.