காணாமல் போனதாக தேடப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலை

காணாமல் போனதாக புதுச்சேரி காவல் துறையினரால் தேடப்பட்டவா், பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெரியவந்தது.

காணாமல் போனதாக புதுச்சேரி காவல் துறையினரால் தேடப்பட்டவா், பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெரியவந்தது.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி தனியாா் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இப்பேருந்து பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தபோது, பேருந்தில் பயணித்த ஒருவா் தனக்கு உடல்நலன் சரியில்லை என்று கூறியுள்ளாா்.

இதையடுத்து ஓட்டுநா் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு, காவல்துறையினருக்குத் தகவலளித்தாா். இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற பெரம்பலூா் நகரக் காவல்துறையினா், அவசர ஊா்தி மூலம் அந்த நபரை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினா்.

இதையடுத்து காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் புதுச்சேரி நாகா்குளம், அண்ணா நகரைச் சோ்ந்த குமரேசன் மகன் கணேஷ்குமாா் (33) என்பதும், கடந்த 3 நாள்களுக்கு முன்னா் காணாமல் போனதாக புதுச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதும், கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com