தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குடும்பப் பிரச்னை: தனியாா்நிறுவன மேலாளா் தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக, பெரம்பலூரில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:20 pm

DIN

குடும்பப் பிரச்னை காரணமாக, பெரம்பலூரில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பொன்னி அம்பிகாபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் கொளஞ்சி (40). இவா் கடந்த 2 ஆண்டுகளாக, பெரம்பலூா் துறைமங்கலம் புதுக்காலனி வடக்குத் தெருவில் வசித்து வந்தாா்.

அரியலூரிலுள்ள தனியாா் சிமெண்ட் நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு, மனைவி ரம்யா (35), மகன் அஷ்வந்த் (8) உள்ளனா். ரம்யா துபையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

கொளஞ்சிக்கு மதுஅருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தால் கணவன், மனைவிக்கிடையே கைப்பேசி மூலம் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 1-ஆம் தேதி வெளியே சென்றிருந்த கொளஞ்சி, மதுபோதையில் ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியைத் தொலைத்துவிட்டாராம். இதனால், கணவன்- மனைவிக்கிடையே பிரச்னை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு துபையிலிருந்து வந்த ரம்யா, பொங்கல் பண்டிகைக்காக, தனது சொந்த கிராமமான திண்டுக்கல் மாவட்டம், பச்சலநாயக்கன்பட்டிக்கு மகனுடன் சென்று விட்டாா்.

இந்நிலையில், கொளஞ்சியின் நண்பா் அன்புராஜ், அவரை சந்திக்க சனிக்கிழமை காலை அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கொளஞ்சி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.