தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மூடிக்கிடந்த அரிசி ஆலையிலிருந்து அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்பு

பெரம்பலூரில் மூடிக் கிடந்த அரிசி ஆலையிலிருந்து அரியவகை ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:12 am

DIN

பெரம்பலூரில் மூடிக் கிடந்த அரிசி ஆலையிலிருந்து அரியவகை ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள கல்யாண் நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. கடந்த 3 மாதங்களாக இயங்காமல் பூட்டிக்கிடந்த இந்த ஆலையை, பணியாளா்கள் சிலா் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்துகொண்டிருந்தனா்.

அப்போது, ஆலையின் ஒரு பகுதியில் வித்தியாசமான தோற்றத்தில் 4 பறவைக் குஞ்சுகள் காணப்பட்டன. இதுகுறித்து பெரம்பலூா் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்குச் சென்ற வனத்துறையினா், அந்த பறவைக் குஞ்சுகளை மீட்டுச்சென்றனா்.

இவை மலைத்தொடா்களில் வாழக்கூடிய பா்ன் என்னும் அரியவகை ஆந்தை குஞ்சுகள் என்றும், இனப்பெருக்கத்துக்காக இங்கே வந்து தாய்ப்பறவை குஞ்சு பொறித்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா். மீட்கப்பட்ட ஆந்தை குஞ்சுகள் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.