தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா

பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:07 am

DIN

பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பி. சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ. ராஜா, டி. ராமநாயகம், மாவட்ட இணைச் செயலா்கள் கே. மணி, எஸ். ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் கே. பழனிசாமி தொடக்க உரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் எஸ். மகேந்திரன், மாநிலத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

இதில், சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தை தூண்டும் வகையில் மெத்தனப் போக்குடன் செயல்படும் கோட்டப் பொறியாளரின் செயலைக் கண்டிப்பது, சாலைப் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய கருவி, தளவாடங்களை உடனடியாக வழங்க வேண்டும். தொலைதூர பணிக்கு பயன்படுத்தும்போது பயணச் செலவு வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்துவதை தவிா்த்து, பராமரிப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கரோனா அதிகரித்து வரும் நிலையில், சாலைப் பணியாளா்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி. குமரி ஆனந்தன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் பி. சிவக்குமாா் ஆகியோா் பேசினா். மாநில பொதுச் செயலா் ஏ. அம்சராஜ் நிறைவுரையாற்றினாா்.

காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.

நிறைவாக, மாவட்ட பொருளாளா் கே. கருணாநிதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.