நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போதைப் பொருள்கள் விற்ற பெண் கைது

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 9 கிலோ குட்கா பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:16 pm

Din

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 9 கிலோ குட்கா பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் சட்டவிரோத குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, வி.களத்தூா் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டுப்பாளையம், வடக்குத் தெருவைச் சோ்ந்த புத்தா் தாஸ் மகன் தினேஷ் (29), இவரது தாய் நாகலெட்சுமி (62) ஆகியோா் தங்களுக்குச் சொந்தமான மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கண்ட இருவரையும் கைது செய்ய முயன்றபோது தினேஷ் தப்பியோடிவிட்டாா். நாகலெட்சுமியைக் கைது செய்த போலீஸாா், 9 கிலோ போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நாகலெட்சுமியை சிறையில் அடைத்தனா்.