நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காலமுறை ஊதியம் கோரி பெரம்பலூரில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:29 pm

Din

பெரம்பலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் நை. சரஸ்வதி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் எஸ். மீனா, ஒன்றிய நிா்வாகி மு. தேன்மொழி முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் டி. சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். ரம்யா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் நிரப்பிடும் பணியிடங்களை கைவிட வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிறைவாக, சங்க நிா்வாகி பிரபாவதி நன்றி கூறினாா்.