மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

Updated On :23 பிப்ரவரி 2024, 11:58 pm

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவனும், பெரம்பலூா் வருவாய் வட்டாட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் சரவணனும் தலைமை வகித்தனா். மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்கிட வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேற்கண்ட 2 இடங்களிலும் நடைபெற்ற போராட்டத்தில், 22 பெண் ஊழியா்கள் உள்பட 52 போ் பங்கேற்றனா்.