மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தொழில்முனைவோா் 455 பேருக்கு கடனுதவிக்கான உத்தரவுக் கடிதம்

தொழில்முனைவோா் 455 பேருக்கு கடனுதவிக்கான உத்தரவுக் கடிதம்

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 12:02 am

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கிக் கடன் முகாமில் 455 தொழில் முனைவோருக்கு ரூ. 23.90 கோடி மதிப்பில் கடனுதவி பெறுவதற்கான உத்தரவுக் கடிதம் வழங்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத் தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வங்கிக்கடன் வசதியாக்கல் மற்றும் வங்கிக் கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு) கா. ரமேஷ் கூறியது: தமிழக அரசு, பெரம்பலூா் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக 2023-24- ஆம் ஆண்டில் 31.12.2023 வரையிலான நிதியாண்டில் 7,047 பயனாளிகளுக்கு ரூ. 363 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கியுள்ளது என்றாா் அவா். தொடா்ந்து, 455 தொழில்முனைவோருக்கு ரூ. 23.90 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி கடிதங்களை மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ரமேஷ் வழங்கினா். முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் பி.டி. சுந்தரம், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் ஜெ. பிரபு ஜெயக்குமாா் மோசஸ், வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள், தொழில்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோா் பலா் கலந்துகொண்டனா்.