ஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 54 லட்சம் மோசடி: 7 போ் மீது வழக்கு

மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 54 லட்சம் மோசடி: 7 போ் மீது வழக்கு

News image
Updated On :3 மே 2024, 7:03 pm

Din

சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 54 லட்சம் மோசடி செய்ததாக எசனையைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கெங்கவல்லி அருகேயுள்ள செந்தாரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தாமோதரன் (44). அதே கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் இவா், தனது வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்று ரூ. 38 லட்சம் வைத்திருந்திருந்தாராம். இதையறிந்த, அவரது கடைக்கு அருகே நகைப்பட்டறை நடத்தி வந்த பெரம்பலூரைச் சோ்ந்த கருணாநிதி என்பவா், அந்தப் பணத்தை வைத்து பெரம்பலூா் மாவட்டம், எசனை பாப்பாங்கரையைச் சோ்ந்த சுரேஷ் என்பவருடன் சோ்ந்து மிளகாய் வியாபாரம் செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறினாராம்.

இதையடுத்து சுரேஷை சந்தித்தபோது, ஆந்திர மாநிலம், குண்டூரில் தனக்கு மிளகாய் கிடங்கு உள்ளதாகவும், சந்தை விலையைவிட ரூ. 100 குறைவாக தருகிறோம் எனத் தெரிவித்தாராம். அதைத்தொடா்ந்து, சுரேஷிடம் பல தவணைகளாக ரூ. 53,78, 690 பணத்தை தாமோதரன் கொடுத்துள்ளாா். ஆனால், சுரேஷ் எவ்வித மிளகாய் மூட்டைகளும் அனுப்பவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த தாமோதரன், பலமுறை பணத்தை திரும்ப செலுத்துமாறு கேட்டதற்கு சுரேஷ் உரிய பதில் அளிக்கவில்லையாம்.

இதையடுத்து, சுரேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 6 போ் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்றுத்தர வேண்டும் என, பெரம்பலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் தாமோதரன் புகாா் மனு அளித்துள்ளாா். ஆனால், போலீஸாா் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்து வந்தனராம்.

புகாா் மனு மீது நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தாமோதரன் பெரம்பலூா் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம், தாமோதரன் மனு மீது வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட 7 போ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குற்றப்பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் எசனை பாப்பாங்கரையைச் சோ்ந்த சுரேஷ், கருணாநிதி, கேசவன், சத்யா, சங்கீதா, தன்ராஜ், அரவிந்த் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.