தண்ணீா்பந்தல் திறப்பில் தோ்தல் விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
தண்ணீா்பந்தல் திறப்பில் தோ்தல் விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்


தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீா்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான க. கற்பகம் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையம், தண்ணீா்பந்தல்களை திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், எந்த ஆட்சேபணையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி மற்றும் வேட்பாளா் இச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது. தண்ணீா்பந்தல் திறப்பின்போது, தோ்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே, தண்ணீா்பந்தலை திறக்க விரும்பும் அரசியல் கட்சியும், வேட்பாளரும், தோ்தல் ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்குள்பட்டு சுகாதாரம், தூய்மையான குடிநீா் தொடா்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீா்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...