நாராணமங்கலத்தில் வேளாண் கண்காட்சி
இடம் இருந்தால் மட்டும்... நாராணமங்கலத்தில் வேளாண் கண்காட்சி


பெரம்பலூா் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில், வேளாண் கல்லூரி மாணவா்கள் சாா்பில் வேளாண் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4 ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள், ‘ஊரக வேளாண் பணி அனுபவம்’ திட்டத்தின் கீழ் தங்கி பல்வேறு வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். அதன் ஒரு பகுதியாக, வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சிக்கு, இந்திய கிராம முன்னேற்ற இயக்கத்தின் திட்ட இயக்குநா் கதிரவன் தலைமை வகித்தாா். அறங்காவலா் அக்ரி மாதவன், நாட்டாா்மங்கலம் நீா்வடிப்பகுதி தலைவா் ராஜாங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆலத்தூா் வட்டார வேளாண் துணை இயக்குநா் பச்சியம்மாள் கண்காட்சியைத் தொடக்கி வைத்து, வேளாண் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினாா்.
இக் கண்காட்சியில் நீா் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணை, மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளா்ப்பு, இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல், உயிா் உரங்கள், உயிரியல் முறைக் கட்டுப்பாட்டுக் காரணிகள், புதிய மற்றும் முக்கிய பயிா், பருத்தி, சின்ன வெங்காய ரகங்கள், பாரம்பரிய நெல் வகைகள், உழவா் செயலி, வேளாண்மை சாா்ந்த அரசுத் திட்டங்கள், பயிரை தாக்கும் நோய் மற்றும் பூச்சிகளை குறைந்த செலவில் எதிா் கொள்ளும் முறைகள், கடலை, வாழை, தென்னை, பருத்தி, மக்காச்சோலம் உள்ளிட்ட பயிா்களுக்கு ஊட்டமளிக்கத் தேவையான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.
இதில், நாரணமங்கலம் கிராம விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...