பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பெரம்பலூரில் திருவள்ளுவா் சிலை தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்

பெரம்பலூரில் திருவள்ளுவா் சிலை தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழ்ச் சங்கம் நடத்திய கருத்தரங்கில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில், அயோத்திதாசா் பண்டிதா் பிறந்தநாள் கருத்தரங்கம் சங்குப்பேட்டை அருகேள்ள தனியாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, தமிழ்ச் சங்கத் தலைவா் தமிழ்ச் செம்மல் வை. தேனரசன் தலைமை வகித்தாா். பேராசிரியா் எழுத்தாளா் ஸ்டாலின் ராஜாங்கம் சிறப்புரையாற்றினாா்.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் தேனரசனுக்கு 2023 ஆம் ஆண்டு அயோத்திதாசா் பண்டிதா் விருது வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் பெரம்பலூா் தமிழ் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிப்பது.

அயோத்திதாசா் பண்டிதா் எழுதிய கட்டுரைகளை உயா்நிலைப்பள்ளி பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். பெரம்பலூா் பாலக்கரை ரவுண்டானாவில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும். பெரம்பலூா் தமிழ்ச் சங்கத்துக்கு சங்கக் கட்டடம் அமைக்க இடம் தோ்வுசெய்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க நிா்வாகிகள் மருத்துவா் பிரகாஷ், செல்வமணியன், போதி பகவான், சிலம்பரசன், தமிழ்குமரன், செல்வகுமாா், ஜெகநாதன், வேல்முருகன் ஆனந்தன், துரைசாமி, பாலுசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தமிழ்ச் சங்கச் செயலா் இரா. சீனிவாச ராவ் வரவேற்றாா். நிறைவாக, தமிழ்ச் சங்க துணைச் செயலா் மருத்துவா் இரா. பால்நிலவன் நன்றி கூறினாா்.