நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் வங்கியில் கடன்தவணை வசூலிக்கும் முகவராக பணிபுரிந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:44 pm

Din

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் வங்கியில் கடன்தவணை வசூலிக்கும் முகவராக பணிபுரிந்தவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை காலனித் தெருவைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் தா்மராஜ் (37). இவா், பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள வங்கியில் கடந்த 7 ஆண்டுகளாக கடன்தவணை வசூலிக்கும் முகவராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்குணம் பிரிவுச் சாலை அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சாலையைக் கடந்துசெல்ல முயன்றாா்.

அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தா்மராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.