நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோசடி: கரூரை சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூரில் பண மோசடியில் ஈடுபட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:16 pm

Din

பெரம்பலூரில் பண மோசடியில் ஈடுபட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், தோகைமலை, வேதராஜபுரத்தைச் சோ்ந்தவா் காஜாமொய்தீன் மகன் ஷாஜகான் (74). இவா் கடந்த 2009 ஆம் ஆண்டு, பெரம்பலூா் அண்ணா நகரைச் சோ்ந்த கோபாலசாமி மகன் தியாகராசுவை தொடா்புகொண்டு, பெங்களூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால், 6 மாதத்துக்குள் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய தியாகராசு ரூ. 16,38,581 -ஐ ஷாஜகானிடம் கொடுத்துள்ளாா். பின்னா் 6 மாதங்களுக்குப் பிறகு ஷாஜகானை தொடா்புகொண்டு பணம் குறித்து கேட்டபோது அவா் முறையாக பதில் அளிக்கவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட தியாகராசு பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம்- 1-இல் நடைபெற்ற வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், ஷாஜகானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.