நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

Updated On :28 நவம்பர் 2024, 8:41 pm

Din

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் போட்டிகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காப்பாளா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

இதில், செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை 100 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயது வரை 200 மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கு 400 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல், 100 மீ ஓட்டப்பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், 50 மீ ஓட்டப்பந்தயம், 15 முதல் 17 வயது வரை குண்டு எறிதல், 100 மீ ஓட்டப்பந்தயம் 100, 16 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வட்டத்தட்டு எறிதல், 200 மீ ஓட்டப்பந்தயம், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்பு பள்ளிகள்) குண்டு எறிதல், கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள் இருபாலருக்கும் 100 மீ. ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு (உபகரணங்களின் உதவியுடன்) 12 முதல் 14 வயது வரை காலிப்பா், கால்தாங்கி உதவியுடன் நடப்பவா்கள் 50 மீ நடைப்போட்டி, 15 முதல் 17 வயது வரை 3 சக்கர வண்டி 150 மீ ஒட்டப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டிகளில் முதல் 3 இடம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவாா்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலா் புவனேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.