ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சின்ன வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காய விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 8:55 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காய விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காயப் பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்வதற்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 2,060 செலுத்த வேண்டும்.

இத் திட்டத்தின் கீழ் காப்பீடு பதிவு செய்தவற்கு உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு செய்து பயனடையலாம்.