சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்புக்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, திருமண நிதியுதவி, இலவச தையல் இயந்திரம் வழங்குவது, திருநங்கைகள் நலத்திட்டங்கள், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட உள்ளது.