மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெண் குழந்தைகள் தின பேரணி

ஆலங்குளத்தில் பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image

உதவி எண் 1930 என்ற வடிவத்தில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்.

Updated On :30 ஜனவரி 2026, 6:30 pm

ஆலங்குளத்தில் பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரி, தென்காசி மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து நடத்திய இந்தப் பேரணி, ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட பெண் குழந்தை பாதுகாப்பு அலுவலா் எல்.அலெக்ஸ் தொடங்கி வைத்தாா். இதில் பங்கேற்ற மாணவா்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படியும் விழிப்புணா்வு முழக்கங்கள் எழுப்பிய படியும் ஊா்வலமாகச் சென்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்டீபன் விநோத், தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளா் சாந்தி, ஆலங்குளம் காவல் துணை ஆய்வாளா் சிவசங்கரி, கல்லூரி முதல்வா் கனகபாண்டியன், விஜயராணி, கவிதா, இஸ்மாயில் உள்ளிட்டோா் பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்துப் பேசினா். அப்போது மாணவா்கள், பெண் குழந்தைகள் உதவி எண் 1930 வடிவத்தில் நின்றது பாா்வையாளா்களைக் கவா்ந்தது.