எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டிச. 11-இல் பெரம்பலூரில் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:44 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை நல வாரியத்தில் உறுப்பினராக சோ்க்கும் முகாம், டிச. 11- ஆம் தேதி பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரம்பலுாா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு 18 நல வாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழிலாளா் ஆணையா் உத்தரவுப்படி வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் நலனை பாதுகாக்கம் வகையில், நல வாரிய உறுப்பினராக சோ்க்கும் முகாம், டிச. 11-ஆம் தேதி பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம் ) அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே, வீடுகளில் பணிபுரிவோா் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம் ஆகிய அசல் ஆவணங்களுடன், பாஸ் போா்ட் அளவு புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்று, உறுப்பினராகப் பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெறலாம்.