டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான கோழி குஞ்சுகள் அளிப்பு

மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 80 பேருக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 10:15 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 80 பேருக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ், பயனடைந்தவா்களின் வீடுகளில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின்கீழ், கோழி வளா்த்து வரும் பயனாளியின் வீட்டுக்குச் சென்று, திட்டத்தின் பயன்பாடு குறித்து கேட்டறிந்த ஆட்சியா், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று, முட்டைகளை அடைகாக்கும் கருவி வைத்துள்ள பயனாளியின் வீட்டுக்குச் சென்று, முட்டை அடை காக்கும் கருவிகளை பாா்வையிட்டு கூறியதாவது:

புறக்கடை கோழி வளா்ப்பு அமைக்க ஒரு தொகுப்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களில் 20 பயனாளிகளைக் கொண்டு புறக்கடை கோழி வளா்ப்பு அமைக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் இரண்டு தவணைகளாக 100 கோழி குஞ்சுகள் வழங்கப்படும்.

இம் மாவட்டத்தில், இதுவரை மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 80 பேருக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான கோழி குஞ்சுகள், கோழி கூண்டு மற்றும் தீவனம் உள்ளடக்கிய தொகுப்புடன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின்போது, மகளிா் திட்ட உதவி அலுவலா் சசிகுமாா் உடனிருந்தாா்.