அரசுப் பேருந்துகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய 26 போ் கைது

அரசுப் பேருந்துகளில், தமிழ்நாடு என்னும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on

அரசுப் பேருந்துகளில், தமிழ்நாடு என்னும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம், பாலக்கரை ஆகிய பகுதிகளில், நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்னும் ஸ்டிக்கரை வெள்ளிக்கிழமை மாலை ஒட்டி முழக்கமிட்டனா். இதையடுத்து, அக் கட்சியைச் சோ்ந்த 26 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, பெரம்பலூா்- நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து, பின்னா் விடுவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com