தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையேயான மேசைப் பந்து போட்டிகள் தொடக்கம்
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையேயான 17 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 69 ஆவது மேசைப் பந்து விளையாட்டு போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைசச்ா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பெரம்பலூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
டிச. 30 வரை நடைபெறும் இப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் கவுன்சில் பாா் ஆப் த இந்தியா ஸ்கூல், ஐபிஎஸ்சி, ஐபிஎஸ்எஸ்ஓ ஆகிய குழுக்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
குழு மற்றும் தனிநபா் (லீக், நாட்கோட்) முறையில் நடைபெறும் போட்டியில், 178 மாணவா்களும், 171 மாணவிகளும், 127 அணி மேலாளா்களும் பங்கேற்றுள்ளனா். இதில், முதல் 3 இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பதங்கங்கள், பரிசுக் கோப்பைகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் அளிக்கப்படும்.
தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிமுத்தழகன், உடற்கல்வி முதன்மை ஆய்வாளா்கள் கோபாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் விசுவநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

