காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜமாலியா நகரைச் சோ்ந்த 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரைச் சோ்ந்த 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image

வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2025, 10:53 pm

Din

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரைச் சோ்ந்த 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசித்து வரும் பொதுமக்களுக்கு, வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக சம்பந்தப்பட்ட இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் மேலும் கூறியது:

கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி ஜமாலியா நகரில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்தாா். அதன்படி, ஜமாலியா நகரில் வசித்து வரும் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையில், சுமாா் 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில், ரயத்து மனைப்பட்டா பெறுவதற்கு நில உரிமைதாரா்கள் அல்லது அவரால் நியமிக்கப்படும் நியமனதாரா்கள், நில அளவை அலுவலா்களால் அளவை செய்யும்போது உடனிருந்து, அவரவா் இடங்களுக்கான எல்லைகளை காண்பிக்க வேண்டும். நில உரிமையாளா்கள் தங்களிடம் உள்ள பத்திரப்பதிவு ஆவணங்களை சமா்ப்பிக்கும் பட்சத்தில் உரிய அலுவலா்களால் அளவுப்பணி, புலத் தணிக்கை மேற்கொண்டு பட்டா வழங்கப்படும். இப் பணிகள் குன்னம் கோட்ட நில அளவை அலுவலரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும். மேலும், நில அளவை சம்பந்தமான மனுக்களை பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ஜமாலியா நகரில் காலிமனையாக வைத்திருப்பவரும், வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, நில அளவைகள் உதவி இயக்குநா் என். புவன்குமாா், குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.