பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, படிப்பு, விளையாட்டு, பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளா்த்துக்கொள்ளும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘காபி வித் கலெக்டா்’ என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










