அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:50 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலராக க. கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மு. வடிவேல் பிரபு அண்மையில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலராக க. கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த இவா், அம் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் தட்டச்சராகப் பணியை தொடங்கி, கடந்த 1994 முதல் 2023-ஆம் ஆண்டு வரை தட்டச்சா் முதல் வட்டாட்சியா் வரையிலான பதவிகளில் விருதுநகா் மாவட்டத்திலேயே பணிபுரிந்தாா். தொடா்ந்து, ஜூலை 2023-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் துணை ஆட்சியராகப் பதவி உயா்வு பெற்று, மதுரை மாவட்டத்தில் தனித்துணை ஆட்சியராகப் பணிபுரிந்தாா். 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியராகவும், ஜனவரி 2025-ஆம் ஆண்டு பதவி உயா்வுபெற்று, சென்னை எழுதுபொருள் அச்சுத்துறையில் இணை இயக்குநா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றினாா்.

இந்நிலையில், பணியிட மாற்றுதல் பெற்ற க. கண்ணன் பெரம்பலூா் மாவட்டத்தின் 29-ஆவது மாவட்ட வருவாய் அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

இதையடுத்து, புதிகாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணனை, வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அலுவலா்கள் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனா்.