காரைக்கால் ஆட்சியா் பொறுப்பேற்பு

காரைக்கால் ஆட்சியா் பொறுப்பேற்பு

Published on

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரியான இஷிதா ரதி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் பணியாற்றி வந்த நிலையில், அவரை புதுவை அரசு செயலராக இடமாற்றி, புதுச்சேரி சாா் ஆட்சியராக பணியில் இருந்த இஷிதா ரதியை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான் அறிவிப்பு வெளியிட்டாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட இஷிதா ரதி, காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், ஆட்சியரக ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com