கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நியாய விலைக் கடை கோரி பெரம்பலூா் ஆட்சியரிடம் மனு

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:58 pm

Syndication

பெரம்பலூா் அருகே கூடுதலாக நியாய விலைக் கடைக் கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவின் விவரம்:

நெய்குப்பை கிராமத்தில் மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. ஆனால், ஒரு நியாய விலைக் கடை மட்டுமே உள்ளது. ஆதிதிராவிடா் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய 3 மற்றும் 9-ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக நீண்டதூரம் செல்லக்கூடிய நிலைமை உள்ளது. மேலும், நியாய விலைக் கடையில் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே, இதை கருத்தில்கொண்டு தங்கள் பகுதிக்கு கூடுதலாக ஒரு நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.